ஆதவ் அர்ஜூனா மீது விமர்சனத்தை குவித்த அவரது சமீபத்திய பேச்சு:
சென்னையில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ’’5 வயதில் என்னுடைய தாயின் தற்கொலையை நான் பார்த்தவன். என் தாயின் அக்காவாக, என் பெரியம்மாவாக இருந்தவர் திலகவதி ஐபிஎஸ். அம்மாவும், என் பெரியம்மாவும் 11 பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்தபோது, சக தோழியாக வாழ்ந்தார்கள். என் அம்மா, காதல் திருமணம் செய்ய விரும்பினார். என் பாட்டி, சாதியைக் காட்டி மறுத்து, கட்டாய திருமணத்தை என் அம்மாவுக்கு செய்து வைத்தார்கள். பின்னர் ஏற்பட்ட வறட்சி, அதனால் வீட்டில் ஏற்பட்ட வன்முறை தான், என் தாய் தற்கொலை செய்ய காரணமானது. அன்று என் பெரியம்மா தான், எங்களை வளர்த்தார்.

