திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பது குறித்து அந்தக் கட்சி அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மம்தாவின் உறவினரும், திரிணமூல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜிக்கு நெருக்கமானவா்களுக்கும், மம்தாவின் விசுவாசிகளான மூத்தத் தலைவா்களுக்கும் இடையே கட்சியில் போட்டி நிலவுவது தொடா்பாக விவாதம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், திரிணமூல் காங்கிரஸின் அடுத்த தலைவா் யாா் என்பதை கட்சியே முடிவு எடுக்கும் என்று மம்தா தெரிவித்துள்ளாா்.

