• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்

GenevaTimes by GenevaTimes
March 14, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


41

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மார்ச் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை மற்றும் 20ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் தலைமையில் இன்று (14) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தெரிவித்தார்.

இதற்கமைய, மார்ச் 19ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையும், 20ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறவுள்ளது. இரண்டாவது நாளான 20ஆம் திகதி பி.ப 4.30 மணிக்கு நம்பிக்கையில்லாப் பிரேரரணை தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக பதில் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

மார்ச் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை சேர் பெறுமதி வரிச்சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கருணாரத்ன, பந்துல பஸ்நாயக்க மற்றும் (வைத்தியகலாநிதி) பி.எம்.பி.சிறில் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணையை எடுத்துக் கொள்ளவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.



Read More

Previous Post

சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்

Next Post

Jaffer Sadiq Case: ஜாபர் சாதிக்கின் சத்துமாவு டெக்னிக்! வீட்டில் சிக்கிய வினோத பொருட்கள்! என்னென்ன தெரியுமா?

Next Post
Jaffer Sadiq Case: ஜாபர் சாதிக்கின் சத்துமாவு டெக்னிக்! வீட்டில் சிக்கிய வினோத பொருட்கள்! என்னென்ன தெரியுமா?

Jaffer Sadiq Case: ஜாபர் சாதிக்கின் சத்துமாவு டெக்னிக்! வீட்டில் சிக்கிய வினோத பொருட்கள்! என்னென்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin