அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி பதவியேற்கவிருக்கிறார். அதே நேரம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதல் தொடங்கியபோது 251 பணயக்கைதிகளை ஹாமஸ் அமைப்பினர் கைது செய்துச் சென்றதாகவும், அவர்களில் பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சிலர் அங்கு பணயக்கைதியாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

