• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கை – இந்திய ஒப்பந்தம் : அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கை – இந்திய ஒப்பந்தம் : அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக
நிறுத்தக் கூடாது என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கோரிக்கை
விடுத்துள்ளார்.

மன்னாரில் (Mannar) உள்ள அலுவலகத்தில் இன்று (2) இடம்பெற்ற ஊடக
சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியல் சாசனத்திலே 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்படும் என
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம்

இதன் நோக்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மீறுகின்ற ஒரு செயற்பாடாக அமையும். ஒரு
அரசியல் சாசனம் வருகின்ற போது, தமிழ் தரப்பின் ஆலோசனையையும் பெற்று அதன்
பின்னர் அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் : அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Indo Sri Lanka Accord Should Not Be Terminated



எங்களுக்கு இனப்பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு தருகின்ற வகையில் புதிய
அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.



அண்மைக்காலங்களில் ஜனாதிபதி 13ஆவது திருத்தச் சட்டம் சம்மந்தமாக,
மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் ஜே.வி.பியின் முக்கிய
செய்தியாக 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கின்ற நிலை இருக்கிறது என்பதை
தெட்டத் தெளிவாக தெரிவித்துள்ளார்.


அந்த வகையிலே எமது பார்வை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள
ஒப்பந்தத்தை மீறுகின்ற வகையில் இந்தியாவை ஓரங்கட்டுகின்ற வகையில் அல்லது
இந்தியாவின் ஒப்பந்தத்தை இல்லாது செய்கிற நிலை இருக்கிறதா? என்பதனை
ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

எனவே அரசியல் சாசனம் எழுதப்படுகின்ற போது தமிழ் தரப்புக்களையும், தமிழ்
தரப்புக்களின் ஆலோசனைகளையும் பெற்று புதிய அரசியல் சாசனம் எழுதப்பட வேண்டும்
என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

புதிய அரசியல் சாசனம்

13ஆவது திருத்தச் சட்டத்தை அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக்
கூடாது.

அதனை நிறைவேற்ற வேண்டும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் : அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Indo Sri Lanka Accord Should Not Be Terminated

இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது இலங்கை
இந்தியாவிற்கும் இடையில் அழிக்க முடியாத ஒப்பந்தமாக காணப்படுகின்றது. எனவே
புதிய அரசியல் சாசனத்தை எழுதி அதனை இல்லாது ஒழிக்கும் சூழலை தற்போதைய புதிய
அரசாங்கம், ஜனாதிபதி செய்ய கூடாது.



பாரிய அளவிலான மக்கள் அவரை நம்பி வாக்களித்து உள்ளனர். தமிழ் மக்களும் அதிக
அளவில் வாக்களித்துள்ளனர். எனவே தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கின்ற
வகையிலே புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.

அதே போல் இலங்கை இந்திய – ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்தச் சட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கான
வாய்ப்புகளை புதிய அரசாங்கமும் ஜனாதிபதியும் செயற்படுத்த வேண்டும் என்பதே எமது
கோரிக்கையாக உள்ளது.“ என தெரிவித்தார்.

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார்

இதேவேளை மன்னார் மாவட்ட மக்கள் அதிக அளவில் அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் சிறந்த முறையில் பணி செய்துள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் : அநுரவிடம் செல்வம் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள் | Indo Sri Lanka Accord Should Not Be Terminated

மேலும் விவசாய
செய்கையும் பாரிய அளவில் அழிவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மழை வெள்ளத்தினால் அரச
உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களை புறம் தள்ளாது மக்களுக்கு
நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை போன்று பாதிக்கப்பட்ட அரச
உத்தியோகத்தர் களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.“ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!c

Read More

Previous Post

துபாயில் வீடு வாங்கிய நெய்மர்.. இத்தனை கோடி விலையா ? | Makkal Osai

Next Post

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Next Post
தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

தெலங்கானாவில் காவல் உதவி ஆய்வாளர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin