அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாகவும், இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு புகாா்கள் எழுந்துள்ள நிலையில், இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தனிநபர் ஒருவர் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
அதில், இவிஎம்-களை அவற்றின் அலைநீளத்தில் மாற்றங்களைச் செய்து நமது வசதிக்கேற்றாற்போல் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

