ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன் விண்கலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பயிற்சி பெற்று, பல விண்வெளி திட்டங்களில் பங்கு பெறுவாா்கள் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தாா்.
மேலும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சியில் இந்திய விண்வெளி வீரா்கள் சா்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என அவா் தெரிவித்தாா்.

