யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் 03 நோயாளர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மூன்று நோயாளர்களும் நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
மேலதிக சிகிச்சை
இந்தநிலையில், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மூன்று உதவியாளர்களுடன் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் தரைவழியாக கொண்டு சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |




&w=1200&resize=1200,675&ssl=1)