இந்நிலையில், கூட்டுக் குழுவின் கூட்டம் புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையைத் தயாரிப்பதில் குழுவின் தலைவா் அவசரம் காட்டுவதாக குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சி உறுப்பினா்கள், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். பின்னா், அவா்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றபோது, கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு தற்போது மக்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

