• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Indian Currency Notes | இந்திய ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாமல் இருக்க இதுதான் காரணமா.. பலருக்கும் தெரியாத தகவல்! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 28, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Indian Currency Notes | இந்திய ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாமல் இருக்க இதுதான் காரணமா.. பலருக்கும் தெரியாத தகவல்! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், உலகம் முழுவதும் உள்ள துறைகள் அனைத்தும் மாற்றம் கண்டு வருகின்றன.

அந்த வகையில், ரூபாய் நோட்டுகள் கூட இ-கரன்சியாக மாறி வருகிறது. எனினும், மக்களிடம் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாமல், நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு பின்னால் நம்பமுடியாத ஓர் தொழில்நுட்ப காரணம் உள்ளது. அதுவே ரூபாய் நோட்டின் நீடித்த ஆயுளுக்கு காரணமாகிறது என்கிறார்கள். இத்தகைய நீட்டித்த ஆயுளைத் தரும் ரூபாய் நோட்டுகள் பற்றிய சுவாரஸ்ய தகவலை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

விளம்பரம்

ஒவ்வொரு நாட்டிலும் கரன்சி நோட்டுகள் முதன்மையானவை தான், அதே நேரத்தில் அது தனித்துவமானதாகவும் இருக்கிறது. நீடித்து நிலைத்திருப்பது முதல் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வரை, இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் தனித்துவமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் வழக்கமான காகிதம் போல் தோன்றினாலும், அது அசாதாரணமானவை. இத்தகைய ரூபாய் நோட்டுகள் நூறு சதவீதம் பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அதனால் தான் அது நீடித்த வலிமை மற்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கின்றன. இந்த சிறப்பு வாய்ந்த பொருள் ரூபாய் நோட்டுக்கு நீடித்த ஆயுளை வழங்குவதோடு, அடிக்கடி பயன்படுத்தும் போதும் அப்படியே இருக்கும்படி வைக்கிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
Buy Now Pay Later சேவையை பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா? தெரிந்துகொள்ளுங்கள்!

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் ரூபாய் நோட்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டது. 1969 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், பிரிட்டிஷ் மன்னர் ஜார்ஜ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை தவிர்த்த இந்தியா, வளர்ந்து வரும் இந்திய ரூபாயின் தொடக்கத்தை பறைசாற்றியது.

இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கிய பாதுகாப்பு அம்சம் ஒவ்வொரு நோட்டின் நடுவிலும் பதிக்கப்பட்ட வெள்ளி நிற பாதுகாப்பு நூல் ஆகும். இந்த நூல் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சின்னத்தைக் கொண்டுள்ளது மற்றும் ரூபாய் நோட்டின் நம்பகத்தன்மையின் முக்கியமான குறியீடாகவும் இது செயல்படுகிறது.

விளம்பரம்

நவீன ரூபாய் நோட்டுகளில் இருக்கும் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, நோட்டை வெளிச்சத்தில் வைத்திருக்கும் போது தெரியும் பாதுகாப்பு அம்சங்களின் வரம்பாகும். குறிப்பாக எலக்ட்ரோடைப் வாட்டர்மார்க்ஸுடன் மகாத்மா காந்தியின் உருவப்படம் இருக்கும். கூடுதலாக, ரூபாய் நோட்டில் மைக்ரோடெக்ஸ்ட் எழுத்துகள் இடம்பெற்றிருக்கும். மேலும் அதில் அச்சிடப்பட்ட எண்கள் அதன் கோணத்தைப் பொறுத்து நிறத்தை மாற்றிக் காட்டும். தட்டையாக வைத்துப் பார்க்கும்போது ​​எண்கள் பச்சை நிறத்திலும், சாய்ந்திருக்கும் போது நீல நிறத்திலும் தெரிவது இதன் சிறப்பம்சம்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்த வருடம் முடியப் போகுது… உங்களுடைய பொருளாதார முடிவை எடுப்பதற்கான கடைசி சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!!!

ரூபாய் நோட்டுகளின் நிர்வாகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் 22வது பிரிவின் கீழ், ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு தனி அதிகாரம் உள்ளது.

ரிசர்வ் வங்கியின் மத்திய நிதி வாரியத்தின் பரிந்துரைகளின்படி, ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் வெளியீடு நிர்வகிக்கப்படுகிறது. மேலும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு மத்திய அரசு எடுக்கும் புதிய நோட்டுகளின் தேவை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசை: ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் முதலிடம் | ICC Test Cricket Bowling Rankings Bumrah returns to top spot

Next Post

Anak selamatkan ibu guna tangki air | Makkal Osai

Next Post
Anak selamatkan ibu guna tangki air | Makkal Osai

Anak selamatkan ibu guna tangki air | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin