தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.
இதுவரை அஸ்வெசும நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு 25.11.2024 முதல் 02.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஆனால், நாட்டில் நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post அஸ்வெசும விண்ணப்பத்திற்கான கால அவகாசம் டிச.09 வரை நீடிப்பு appeared first on Thinakaran.


&w=1200&resize=1200,675&ssl=1)