பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், சில நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
எகிப்து நாட்டின் தூதுவர், அடெல் இப்ராஹிம்( Adel Ibrahim), ஈரான் தூதுவர், கலாநிதி அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh), ஜப்பான் தூதுவர் ISOMATA Akio மற்றும் இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (Apostolic Nuncio) பேராயர் பிரையன் உடைக்வே (Monsignor Brian Udaigwe) ஆகியோர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உட்பட தூதரகங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள், இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
The post வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த பிரதமர் இராஜதந்திர உறவுகள் குறித்து கலந்துரையாடல் appeared first on Thinakaran.


&w=1200&resize=1200,675&ssl=1)