• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாதம் ரூ.10,000 செலுத்தினா 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி கிடைக்குமா.. அது என்ன சூப்பர் திட்டம்!

GenevaTimes by GenevaTimes
November 26, 2024
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மாதம் ரூ.10,000 செலுத்தினா 15 ஆண்டுகளில் ரூ.1 கோடி கிடைக்குமா.. அது என்ன சூப்பர் திட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


15 ஆண்டுகளில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் சம்பாதிக்க, சரியான மியூச்சுவல் ஃபண்டு, நிலையான முதலீடு மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்.

முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது காலப்போக்கில் உங்களது செல்வத்தை அதிகரிப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். சரியான மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் ரூ.10,000 செலுத்துவதன் மூலம், 15 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிக்க முடியும். இந்த இலக்கை அடைவது எப்படி மற்றும் உங்கள் எஸ்ஐபி-க்கான சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளைப் பற்றி இங்கே விரிவாக அறிந்துகொள்ளலாம்.

விளம்பரம்

எஸ்ஐபி-யின் சக்தி முதலீடு: மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு நிலையான தொகையை தவறாமல் முதலீடு செய்ய எஸ்ஐபி, உங்களை அனுமதிக்கிறது. இது ரூபாயின் சராசரி மற்றும் கூட்டுத் திறனைப் பயன்படுத்திக் கொள்வதால், காலப்போக்கில் கூடுதல் வருவாயை உருவாக்க வழி செய்கிறது. உதாரணமாக, 15% வருடாந்திர வருமானம் கொண்ட ஃபண்டில் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்தால், உங்கள் முதலீடு 15 ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு மேல் உயரலாம்.

நீண்ட கால SIP-களுக்கான சிறந்த செயல்திறன் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகள்:

விளம்பரம்

சில ஸ்மால்-கேப் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வரலாறுகளை உற்றுநோக்கும் போது, அது எதிர்பார்க்காத அளவில் வருவாயை தந்துள்ளன. அவை நீண்ட கால எஸ்ஐபி முதலீடுகளுக்கு பொருத்தமாக அமைகின்றன. அதற்கான சில உதாரணங்களை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க:
ஆதார் OTP-ஐ பயன்படுத்தி ​​UAN-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி? – முழு விவரம் இதோ!

1. எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட்

* நீட்டிக்கப்பட்ட உள் வருவாய் விகிதம்: 24.03%

* 15 ஆண்டுகளில் சாத்தியமான வருவாய்: ₹1.35 கோடி

விளம்பரம்

* அதிக வளர்ச்சி திறன் கொண்ட ஸ்மால் கேப் நிறுவனங்களில் இந்த ஃபண்ட் கவனம் செலுத்துகிறது.

2. டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட்

* நீட்டிக்கப்பட்ட உள் வருவாய் விகிதம்: 22.33%

* 15 ஆண்டுகளில் சாத்தியமான வருவாய்: ₹1.16 கோடி

* பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஸ்மால் கேப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

3. ஆக்ஸிஸ் கிரவுத் ஆப்பர்சுனிட்டிஸ் ஃபண்ட்

* வருவாய் விகிதம்: சமீபத்திய ஆண்டுகளில் 18% க்கும் அதிகமான வருவாயை தந்துள்ளது.

* மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் நிறுவனங்களின் கலவையை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி…???

குறிப்பு: கடந்தகால செயல்திறன், எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. எனவே உங்கள் முதலீடுகளை எப்போதும் பன்முகப்படுத்தி முதலீடு செய்யவும் மற்றும் நிதி ஆலோசகரை அணுகவும்.

எஸ்ஐபி-கள் மூலம் ரூ.1 கோடியை அடைவதற்கான வழிகள்

எவ்வளவு சீக்கரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களா, அவ்வளவு நல்லது, ஏனெனில் நீண்ட கால முதலீடாக இருப்பதால், சில ஆண்டுகள் தாமதம் கூட உங்கள் இறுதி வருவாயை கணிசமாக பாதிக்கலாம்.

விளம்பரம்

1. சரியான நிதியைத் தேர்ந்தெடுக்கவும்

2. முன்னதாக, நிலையான வருமானத்தை தந்த நிதிகளைத் தேடுங்கள்.

3. நிதியின் செலவு விகிதம் மற்றும் வரையறுக்கப்பட்ட போர்ட்ஃபோலியோவை சரிபார்க்கவும்.

4. உங்கள் ரிஸ்க்கை மதிப்பிடுங்கள் – ஸ்மால்-கேப் ஃபண்டுகள் அதிக வருமானத்தை அளிக்கின்றன, ஆனால் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

5. முடிவில் நிலையாக இருங்கள்

6. சந்தை சரிவின் போதும், ரூ.10,000-ஐ தவறாமல் முதலீடு செய்யுங்கள்.

இதையும் படிக்க:
பயன்படுத்திய மற்றும் புதிய கார்களுக்கான கடன்கள்: உங்களுக்கான சிறந்த ஆப்ஷன் எது?

விளம்பரம்

7. ரூபாய் செலவு சராசரியிலிருந்து, பலனடைவதற்கு நிலைத்தன்மை மிக முக்கியமானது.

8. எஸ்ஐபி தொகையை படிப்படியாக அதிகரிக்கவும்

9. உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, உங்கள் எஸ்ஐபி பங்களிப்பை அதிகப்படுத்துங்கள், இது உங்களுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கலாம்.

10. பல ஃபண்டுகள் ஸ்டெப்-அப் எஸ்ஐபி என்கிற விருப்பத்தின் மூலம் எஸ்ஐபி முதலீட்டு தொகையை அதிகமாக்குகின்றன.

11. உங்கள் ஃபண்டை எப்போதுமே கண்காணியுங்கள், வைப்பட்டால் சரிசெய்யுங்கள்

12. உங்கள் முதலீடுகள் உங்கள் நிதி இலக்குகளுடன் ஒத்துப்போவதை உறுதிசெய்ய அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும்.

13. ரிஸ்க் குறைவாக இருக்கும் ஃபண்டுகளை தேர்ந்தெடுப்பது, உங்கள் இலக்கை சரியான நேரத்தில் அடைய உதவும்.

நீண்ட கால எஸ்ஐபி-களின் நன்மைகள்

ஒழுங்குமுறையான முதலீடு: எஸ்ஐபி-கள் செல்வத்தை உருவாக்குவதற்கான ஒழுங்கு முறையை ஊக்குவிக்கின்றன.

இதையும் படிக்க:
புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!

ரூபாய் மதிப்பின் சராசரி: தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், சந்தை வீழ்ச்சியின் போது அதிக யூனிட்களை வாங்குகிறீர்கள் மற்றும் அதிகபட்சமாக இருக்கும் போது குறைவாக வாங்குகிறீர்கள், இதன்மூலம் ஒரு யூனிட்டுக்கான ஒட்டுமொத்த செலவைக் குறைக்கிறீர்கள்.

கூட்டு சக்தி: நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்திருக்கிறீர்களோ, அதற்கேற்றாற்போல் உங்களது வருமானமும் உயரும்.

கவனிக்க வேண்டியவை: சந்தை ஏற்ற இறக்கம்: ஈக்விட்டி ஃபண்டுகள், குறிப்பாக ஸ்மால் கேப் ஃபண்டுகள், ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகின்றன. எனவே பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துவது முக்கியம்.

செயல்திறன்: உங்கள் ஃபண்டின் செயல்திறனைக் கண்காணித்து, அது தொடர்ந்து குறையும் பட்சத்தில் வேறு ஃபண்டுக்கு மாறுவது சிறந்தது.

வரி: நீண்ட கால மூலதன ஆதாயங்கள் (எல்டிசிஜி) வரி ஈக்விட்டி ஃபண்டுகளுக்குப் பொருந்தும், ஆனால் இது மற்ற முதலீட்டு விருப்பங்களுடன் ஒப்பிடும்போது குறைவானது.

உதாரணம்:

15% வருடாந்திர வருவாயை வழங்கும் மியூச்சுவல் ஃபண்டில் 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்:

மொத்த முதலீடு: ரூ.18,00,000

மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.1,00,27,601

இந்த கணக்கீடு ஒழுங்குமுறையான எஸ்ஐபி முதலீட்டின் திறனை எடுத்துக்காட்டுகிறது.

யாரும் அறிந்திராத தயிரின் 6 பக்க விளைவுகள்.!


யாரும் அறிந்திராத தயிரின் 6 பக்க விளைவுகள்.!

15 ஆண்டுகளில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வருமானத்தை உருவாக்க, சரியான மியூச்சுவல் ஃபண்டு, நிலையான முதலீடு மற்றும் நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அடைய முடியும். நீங்கள் ஸ்மால்-கேப், மிட்-கேப் அல்லது மல்டி-கேப் ஃபண்டுகளை தேர்வு செய்தாலும், உங்கள் முதலீடுகளை ரிஸ்க் மற்றும் நிதி நோக்கங்களுக்கேற்ப சீரமைப்பது அவசியம்.

.

Read More

Previous Post

Rishabh Pant Salary | வரியை கழித்தால், ரிஷப் பண்ட்-க்கு ரூ.27 கோடியில் எவ்வளவு கிடைக்கும்?

Next Post

வேளாண்மை சந்தையில் களமிறங்கும் ஆளில்லா வானூர்திகள்! – சிறப்பம்சம் என்ன?

Next Post
வேளாண்மை சந்தையில் களமிறங்கும் ஆளில்லா வானூர்திகள்! – சிறப்பம்சம் என்ன?

வேளாண்மை சந்தையில் களமிறங்கும் ஆளில்லா வானூர்திகள்! - சிறப்பம்சம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin