மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வெற்றியில் எனது பங்களிப்பு மிகச்சிறியது என்றும், இது எங்கள் அணிக்கு கிடைத்த வெற்றி என்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால், கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களுடன் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசியதாவது:
”மக்கள் மாபெரும் வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றி மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்ளனர் என்பதை காட்டுகிறது.

