அமெரிக்காவில் அதானி, அவரின் உறவினர் சாகர் அதானி மற்றும் 6 உயர்மட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதனால் அதானியின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. கென்யாவில் அதானி நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. அதானி லஞ்சம் கொடுத்தது உண்மையாக இருந்தால் அவர் கைது செய்யப்படுவாரா?
சுமார் 2000 கோடி ரூபாய் அளவு இந்திய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளைப் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது அமெரிக்க நீதியமைப்பின் நடுவர் மன்றம் (கிராண்ட் ஜூரி) .
அதானி நிறுவனம் அதற்கு லாபகரமான சோலார் மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றவியல் பிரிவின் இணை துணை அட்டர்னி ஜெனரல் லிசா ஹெச் மில்லர் தெரிவித்துள்ளார்.

