தலைநகர் டெல்லியைப் பொருத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில், அதாவது அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், இந்த ஆண்டும் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், காற்று மாசு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று டெல்லி மற்றும் வட மாநில காற்று மாசு தொடர்பான வழக்குகள் நீதிபதி அபய் ஓகா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரிக்கப்பட்டன. 4 ஆம் நிலை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வேளையில், வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த டெல்லி அரசும், காவல்துறையும் தவறிவிட்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழையாமல் தடுக்க 113 எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 13 மனுதாரர்களின் வழக்கறிஞர்களை டெல்லி காவல் துறை அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள் :
ஐந்து நாளில் 31 தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!
இந்த கட்டுப்பாடுகள் எத்தனை நாட்கள் தொடர வேண்டும் என்பதை நவம்பர் 25 ஆம் தேதி விசாரணையின் போது முடிவு செய்யப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
