அந்தப் பயணத்தின் போது மகாராஷ்டிரத்தில் இருந்து 8 பொருள்கள், ஜம்மு-காஷ்மீரில் இருந்து 5 பொருள்கள், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 3 பொருள்கள், ஜார்க்கண்டில் இருந்து 2 பொருள்கள் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், உத்தர பிரதேசம், பிகார், ஒடிஸா, லடாக் ஆகிய பகுதிகளில் இருந்து தலா ஒரு பொருளை பரிசுப் பொருளாகக் கொண்டு சென்றிருந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரத்தின் பரிசுகளில் சிலோஃபர் பஞ்சாமிர்த கலசம் நைஜீரியாவின் அதிபருக்கு வழங்கினார். மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் இருந்து பாரம்பரிய கைவினைத்திறனுக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டான வார்லி ஓவியங்கள் பிரேசில் அதிபருக்கு வழங்கப்பட்டது.
கரிகாம் நாடுகளின் தலைவர்களில் புணேவிலிருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளி ஒட்டகத் தலையுடன் கூடிய பூ சிலை ஆஸ்திரேலியாவின் பிரதமருக்கு வழங்கப்பட்டது. பாரம்பரிய வடிவமைப்புடன் கையால் செதுக்கப்பட்ட வெள்ளி சதுரங்கப் பலகை போர்த்துகல் பிரதமருக்கு வழங்கப்பட்டது.

