கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இவரது அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக மது பங்காரப்பா இருந்துவருகிறார்.
இந்நிலையில், இன்று கர்நாடகா மாநிலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம், இலவச நீட், சி.இ.டி. பயிற்சி வழங்கும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்தத் துவக்க விழா அந்த மாநிலத்தின் சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
ஆன்லைன் மூலம், வீடியோ கான்ஃபரன்ஸில் இந்த துவக்க விழா நடைபெற்றது. இதில், மாநிலக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல், மாணவர்களும் இந்த நிகழ்வில் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள் :
Exit Polls | மகாராஷ்டிரா, ஜார்கண்ட் இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு
இந்தத் துவக்க விழாவில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோதே, இடையில் ஒரு மாணவர், ‘அமைச்சருக்கு கன்னடமே ஒழுங்காக பேச தெரியவில்லை’ என்று தெரிவித்தார். இது அமைச்சர் மது பங்காரப்பா காதில் விழவே, ஆவேசம் அடைந்த அவர், “யார் அதை சொன்னது. நான் என்ன இப்போது உருதுவிலா பேசிக்கொண்டிருக்கிறேன்?
எனக்கு கன்னடம் தெரியவில்லை என யார் சொன்னது. இதனை பதிவு செய்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுங்கள். இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை இப்படியே அமைதியாக கடந்து செல்லவிடமாட்டேன்” என்று தெரிவிக்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் அதிகளவில் பரப்பட்டுவருகிறது. இந்நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர் பசனகவுடா ஆர் பாட்டீல் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கல்வி அமைச்சர் கன்னடம் பேசமாட்டார் என்பது அரசுக்கு தெரியும். அமைச்சருக்கு கன்னடம் பேச தெரியவில்லை என்று தெரிவித்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க ஊடகங்களுக்கு முன்பே அவர் உத்தரவிட்டுள்ளார்.
ಗುಬ್ಬಿ ಮೇಲೆ ಬ್ರಹ್ಮಾಸ್ತ್ರ
ಶಿಕ್ಷಣ ಸಚಿವರಿಗೆ ಕನ್ನಡ ಬರುವುದಿಲ್ಲ ಎಂಬುದು ರಾಜ್ಯಕ್ಕೆ ತಿಳಿದಂತ ವಿಚಾರ. ವಿದ್ಯಾರ್ಥಿ ಒಬ್ಬ ಸಚಿವರಿಗೆ ಕನ್ನಡ ಬರೋದಿಲ್ಲ ಅಂತ ಹೇಳಿದ್ದಕ್ಕೆ ಅವನ ಮೇಲೆ ಕ್ರಮ ಕೈಗೊಳ್ಳುವಂತೆ ಮಾಧ್ಯಮಗಳ ಎದುರೇ ಸಚಿವರು ಹೇಳಿದ್ದು ಇವರು ಎಷ್ಟು ಅಪ್ರಾಮಾಣಿಕರು ಎಂಬುದು ತೋರಿಸುತ್ತದೆ.
ರಾಜ್ಯದ ಶಿಕ್ಷಣ ಸಚಿವರು… pic.twitter.com/uXTag1EwEY
— Basanagouda R Patil (Yatnal) (@BasanagoudaBJP) November 20, 2024
மாநிலக் கல்வித்துறை அமைச்சர் தங்கு தடையின்றி கன்னட மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிய வேண்டும். மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஜனநாயகத்தில் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தங்கள் கருத்தை சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. அமைச்சரை கேள்வி கேட்ட மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
