மலேசிய மாநிலமான சபாவில் சுற்றுலா வேன் மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் மார்ச் 11ஆம் தேதியன்று பிற்பகல் நடந்தது.இந்த விபத்தில் 60 மற்றும் 40 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் முறையே சிங்கப்பூர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள்.
வேன் ஓட்டுநர் உட்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
இந்த விபத்து குறித்து மாலை 4.03 மணி அளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post மலேசியாவில் சுற்றுலா வேன் மற்றும் லாரி மோதி விபத்து!! இருவர் பலி!! appeared first on SG Tamilan.