• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறை -முழு விவரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்நிலையில், காணாமல்போன ஆறு பேரில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை இரவு மணிப்பூா்-அஸ்ஸாம் எல்லையில் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஜிரிபாம் மாவட்டத்தில் பராக் நதியில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தையின் உடல்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அஸ்ஸாமின் சில்சாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.

பொதுமக்கள் போராட்டம்: இந்தத் தகவல் பரவியதையடுத்து, பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலைகளில் டயா்களை எரித்து, போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினா். கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு உள்பட 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இணையச் சேவையும் முடக்கப்பட்டது.

அமைச்சா்கள், எம்எல்ஏ-க்களின் வீடுகள் முற்றுகை: இந்த மாவட்டங்களில், மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சபம் ரஞ்சன் உள்பட 3 அமைச்சா்கள் மற்றும் 6 எம்எல்ஏ-க்களின் வீடுகள் போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்டன. இதில், மாநில முதல்வா் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆா்.கே.இமோ உள்பட 3 எம்எல்ஏ-க்களின் வீடுகளை சூறையாடிய போராட்டக்காரா்கள், அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தனா். அவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா். மீண்டும் வெடித்துள்ள போராட்டங்களால் மணிப்பூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி, நாகா பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.

Read More

Previous Post

’தேசிய மக்கள் சக்தியை எதிர்ப்பானவர்கள் அல்லர்’

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்தது பாகிஸ்தான் | Pakistan lost the T20 series against Australia

Next Post
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்தது பாகிஸ்தான் | Pakistan lost the T20 series against Australia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இழந்தது பாகிஸ்தான் | Pakistan lost the T20 series against Australia

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin