கங்குவா படத்தின் கதாநாயகியின் தந்தையிடம் ஒரு கும்பல் ரூ.25 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளது. போலீஸ் அதிகாரியாக இருப்பவரிடமே மோசடி செய்தது எப்படி?
பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியான நடிகை திஷா பதானி தற்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திஷா பதானி வருத்தத்தில் இருக்கும் நிலையில், அவரது தந்தையை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி பணத்தை பறித்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் பதானி ஓய்வுபெற்ற துணைக் கண்காணிப்பாளராக உள்ளார். அவருக்கு அரசு ஆணையத்தில் உயர் பதவி தருவதாக கூறி ஒரு மோசடி கும்பல் ரூ.25 லட்சத்தை ஆட்டையை போட்டு உள்ளனர்.
இதுகுறித்து அவர் உத்தரபிரதேச காவல் நிலையத்தில் சிவேந்திர பிரதாப் சிங், திவாகர் கார்க், ஜூனா அகாராவைச் சேர்ந்த ஆச்சார்யா ஜெயபிரகாஷ், ப்ரீத்தி கார்க் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஐந்து பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச அரசாங்க ஆணையத்தில் மதிப்பு மிக்க உயர் பதவி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.25 லட்சம் கொடுத்ததாக நடிகையின் தந்தை புகாரில் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதத்திற்குள் பதவி உதவி கிடைக்கவில்லை என்றால், வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால், பணம் கொடுத்து மூன்று மாதத்திற்கு மேலாகியும் எந்த ஒரு தகவலும் வரவில்லை.
Also Read | மணிப்பூர்: கடத்திச் செல்லப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்பு… மீண்டும் பதட்டமான சூழல்!
பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள் என்னை மிரட்டி, மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக புகாரில் நடிகை திஷாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
அரசியலில் செல்வாக்கு இருப்பதாக சொல்லி இந்த கும்பல் பலரை ஏமாற்றி வருவதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் திஷா பதானியின் தந்தை புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கங்குவா படத்தின் கதாநாயகிக்கு இப்படி ஒரு சோதனையா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)