ட்ரம்ப் அரசில் தேசிய புலனாய்வு இயக்குநராக செயல்படவிருக்கிறார் துளசி கபார்ட். இத்தகைய உயர் பதவிக்கு வரும் முதல் இந்து – அமெரிக்கர் துளசிதான்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகையில் துளசியை “Fearless Spirit’ எனப் புகழ்ந்தார் ட்ரம்ப்.
43 வயதாகும் துளசி கபார்ட் தனது 21 வயதில் ஹவாய் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அப்போது ஹவாய் பிரதிநிதிகள் சபையில் (சட்டமன்றம்) தேர்ந்தெடுக்கப்பட்ட இளவயது உறுப்பினராகவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினராகும் முதல் இந்து பெண்ணாகவும் சாதனை படைத்தார். அவரது பதவியேற்பிலும் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

