ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற அரசின் கட்டுப்பாட்டை பெண்கள் ஏற்க மறுக்கின்றனர். இதற்காக ஹிஜாப் அணியாத பெண்களின் மனநிலையை சரி செய்யப்போவதாக சிகிச்சை மையத்தைத் தொடங்குகிறது ஈரான் அரசு.
இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானில் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றி கொண்டுவரப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பெண்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். ஈரானில் எழுந்த மிகப் பெரிய பெண்கள் போராட்டத்தை வன்முறையுடன் அடக்கியது ஈரான் அரசு. ஆனாலும் பெண்களை அரசு வழி நடத்தும் விதத்துக்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.

