தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்பாரிக்காவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி சென்சுரியனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு பதிலாக ரமன்தீப் சிங் சேர்க்கப்பட்டார். இதையடுத்து டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 107, அபிஷேக் ஷர்மா 50 ரன்கள் எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஆண்டிலே சிமெலேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

&w=1200&resize=1200,675&ssl=1)