• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.100 கோடியை நன்கொடையாக கொடுத்த தொழிலதிபர்.. யார் இவர் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 12, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.100 கோடியை நன்கொடையாக கொடுத்த தொழிலதிபர்.. யார் இவர் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கூகுளில் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற உலகெங்கிலும் உள்ள பல பெரிய நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை பொறுப்பில் உள்ளனர். இவர்களில் பலர் சொந்தமாக நிறுவனங்களையும் உருவாக்கி பின்னர் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர். இந்த கட்டுரையில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்தை உருவாக்கி, தற்போது அமெரிக்க நிறுவனத்தை வழிநடத்தும் இந்திய கோடீஸ்வரர் ஒருவரைப் பற்றி தன் தெரிந்துகொள்ளப் போகிறோம். அவரது பெயர் ராகேஷ் கங்வால். ரூ.1,52,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமான இண்டிகோவின் (IndiGo) இணை நிறுவனர்.

விளம்பரம்

சமீபத்தில் அமெரிக்க விமான நிறுவனமான சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் தலைவராக கங்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 71 வயதான இவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போர்டில் சேர்ந்தார். அதுமட்டுமின்றி இந்த விமான நிறுவனத்தின் 108 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.906 கோடி) மதிப்புள்ள 36 லட்சம் பங்குகளையும் வாங்கியிருந்தார்.

ஐஐடி முன்னாள் மாணவரான இவர், 1984-ம் ஆண்டு யுனைடெட் ஏர்லைன்ஸில் தனது விமான கேரியரைத் தொடங்கினார். அதன்பின்னர் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவை உருவாக்கினார். ஐஐடி கான்பூரில் (1975) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் பட்டம் பெற்ற கங்வால், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றார். ஏப்ரல் 2022-ம் ஆண்டு, ஐஐடி கான்பூர் வளாகத்தில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளியை அமைப்பதற்காக ரூ.100 கோடி நன்கொடை அளிப்பதாக கங்வால் அறிவித்தார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, கங்வாலின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.46,255 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க : EPF Scheme | இபிஎப் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்..? முழு விவரம் இதோ..!

விமானப் போக்குவரத்துத் துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த கங்வால், அமெரிக்க ஏர்வேஸ் குழுமத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி (CEO) மற்றும் தலைமை இயக்க அதிகாரி (COO) போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். இதுதவிர வேர்ல்ட்ஸ்பான் டெக்னாலஜிஸின் தலைவர், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றவது எப்படி?


ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றவது எப்படி?

இண்டிகோ நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் ராகுல் பாட்டியாவிற்கும் கங்வாலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. 2019-ல் இந்த முரண்பாடுகள் பொதுவெளியில் தெரிய ஆரம்பித்தன. இதனையடுத்து பிப்ரவரி 2022-ம் ஆண்டு, இண்டிகோவின் தாய் நிறுவனமான InterGlobe Aviation நிறூவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து கங்வால் ராஜினாமா செய்தார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் விமான நிறுவனத்திலுள்ள தன்னுடைய பங்கை கணிசமாக குறைக்கப் போவதாகவும் அறிவித்தார்.

விளம்பரம்

ஆகஸ்ட் 2024-ம் ஆண்டு, கங்வால் மற்றும் அவரது குடும்ப அறக்கட்டளை இண்டிகோ நிறுவனத்தில் தங்களுக்குள்ள 5.83 சதவிகித பங்குகளை சுமார் ரூ.10,500 கோடிக்கு விற்றனர். பங்கு விற்பனைக்குப் பிறகு, இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தில் கங்வாலின் பங்கு 5.89 சதவீதத்திலிருந்து 5.31 சதவீதமாகக் குறைந்தது. அதே சமயம் சின்கர்பூ ஃபேமிலி டிரஸ்டின் பங்கு 13.49 சதவீதத்திலிருந்து 8.24 சதவீதமாகக் குறைந்து போனது.

.

Read More

Previous Post

IND vs BAN : 12 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த இந்திய அணி… வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-யில் அதிரடி வெற்றி

Next Post

யூசோப் ராவுத்தர் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது | Makkal Osai

Next Post
யூசோப் ராவுத்தர் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது | Makkal Osai

யூசோப் ராவுத்தர் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin