ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு கிஷ்துவார் மாவட்டத்தில் கிராம பாதுகாவலர்கள் நசீர் அகமது, குல்தீப் குமார் ஆகிய இருவரை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் கூறியதாவது:
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப் பள்ளத்தாக்கின் மார்கி பகுதியைச் சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதி இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், ஒரு ஏகே ரக துப்பாக்கி, இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவித்தனர்.

