ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், சண்டே மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதால், 10 பேர் காயமடைந்தனர்.
மக்கள் காய்கனிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள், காய்கனி தள்ளு வண்டியின் மீது கையெறி குண்டுகளை வீசினர், அப்போது காய்கறி வாங்கிக்கொண்டிருந்தவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், SHMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் வீடு திரும்பினர்.
மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி உஸ்மான் கொல்லப்பட்ட நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
காய்கறி மார்க்கெட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)