• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா ரோகித் சர்மா? மீண்டும் கேப்டனாகும் மூத்த வீரர்?

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா ரோகித் சர்மா? மீண்டும் கேப்டனாகும் மூத்த வீரர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மாற்று தேடும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 37 வயதான ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 6 இன்னிங்ஸ்களில் வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் சர்மாவின் பார்ம், உடல் தகுதி மற்றும் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ ஒரு புதிய வீரரைத் தேடத் தொடங்கியுள்ளது.

விளம்பரம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடர் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்குப் பல நாட்களுக்கு முன்பே கே.எல். ராகுல் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய இரு வீரர்களும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த இருவரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர், இருப்பினும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டனர்.

கே.எல். ராகுல் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோரை மற்ற வீரர்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதற்கான காரணம், அவர்களை ஆஸ்திரேலிய பிட்சுகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வைப்பதாக இருக்கலாம். ஆனால் இது மட்டும் காரணமாக இருந்திருந்தால், யஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் சர்ஃப்ராஸ் கான் போன்ற இளைஞர்களையும் இந்திய ஏ அணியில் சேர்த்திருப்பார்கள். அப்படி இல்லாமல் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கே.எல். ராகுல் குறித்து வேறு திட்டத்தை வகுத்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
“எதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்…” – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடிய ராபின் உத்தப்பா

மூத்த வீரர்களில் கே.எல். ராகுல் மட்டும் ஏன் முதலில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார் என்பதற்கான காரணம் தெளிவாக உள்ளது. கே.எல்.ராகுலை கோச் கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகம் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. அவர் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட வைக்கப்பட்டார். சர்ஃப்ராஸின் 150 ரன்கள் காரணமாக, ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் ராகுலின் இடம் உறுதியற்றதாகிவிட்டது. ஆனால், ராகுலை பிசிசிஐ கேப்டன் பதவிக்குத் திட்டமிடுகிறது. குறிப்பாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் கேப்டனாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் தோல்வியடைந்தாலோ அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலோ, பிசிசிஐ அவரை நீக்கினாலோ, தற்போதுள்ள வீரர்களில் கேப்டனாக நியமிக்கும் வகையில் யாரும் இல்லை. ஜஸ்பிரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் கேப்டன்களாக வாய்ப்புண்டு.

காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!


காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!

ஆனால் அஸ்வின் மற்றும் பும்ரா, அனைத்து போட்டியிலும் விளையாடுவது கடினம். பண்ட் காயத்தில் இருந்து தற்போது தான் மீண்டுள்ளார். இதனால் பிசிசிஐ அவருக்குத் தற்போது பெரிய பொறுப்பைக் கொடுக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. கில்லுக்கு கேப்டன்ஷிப் கொடுப்பதும் சரியாக இருக்காது எனவே கருதப்படுகிறது. அதனால்தான் அணி நிர்வாகம் கே.எல். ராகுலை கேப்டனாக்கத் திட்டமிடுகிறது எனச் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் மிடில் ஆர்டரில் இல்லாமல், அவர் ஓப்பனர் ஆகத் தனது இடத்தை உறுதிப்படுத்தினால், கேப்டன்ஷிப் பதவிக்கு வலுவான போட்டியாளராக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

காஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு; நேற்று வாக்குவாதம் இன்று கைகலப்பு!

Next Post

மதுபானத்தின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Next Post
மதுபானத்தின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மதுபானத்தின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin