நிலமோசடி புகார் தொடர்பான வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா காவலர்கள் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் இருந்த நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர வளர்ச்சி ஆணையமான MUDA மாற்று நிலம் வழங்கியது. இந்த மாற்று நிலம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சித்தராமையா, அவரின் மனைவி பார்வதி மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி மீதும் லோக் ஆயுக்தா காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகும்படி சித்தராமையாவுக்கு மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா காவலர்கள் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனை ஏற்ற முதலமைச்சர் சித்தராமையா, மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா காவல்நிலையத்தில் ஆஜராகினார்.
இதையும் படிங்க: ‘ஒருதலைப்பட்சமான தகவல்’ புகார்… விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!
காலை 10 மணிக்கு ஆஜரான சித்தராமையாவிடம் பல்வேறு கேள்விகளை காவலர்கள் முன்வைத்தனர். லோக் ஆயுக்தா காவலர்களின் கேள்விகளுக்கு சித்தராமையா, 2 மணி நேரம் பதில் அளித்தார். இதனிடையே சித்தராமையா பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
