6 இலங்கையர்கள் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் இல் உள்ள அவர்களது வீட்டில் கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் குறித்த குடுபத்துடன், உயிரிழந்த காமினி அமரகோன் என்பவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த தனுஷ்க விக்கிரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

