சமீபத்தில் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட டேட்டாக்களின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபர் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.9% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்தது. சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் அனைத்தும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விவரங்களின்படி, அக்டோபர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.33,821 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.41,864 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.99,111 கோடியாகவும், செஸ் வரி வசூல் ரூ.12,550 கோடியாகவும் இருந்துள்ளது. எனவே கடந்த அக்டோபர் மாதம் மொத்த ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இதுவரை மொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் அதிகரித்து ரூ.12.74 லட்சம் கோடியாக உள்ளது, அதே சமயம் 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.11.64 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியை எட்டியது. 2023 – 24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகமாகும். மார்ச் 2024இல் முடிவடைந்த நிதியாண்டின் சராசரி மாத வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் சராசரியான ரூ.1.5 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
ஜூலை 1, 2017ஆம் ஆண்டு முதல் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது, மேலும் ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டத்தின் விதிகளின்படி, ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ஐந்தாண்டு இழப்பீடு பெற மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
இதையும் படிக்க:
160 ஆண்டுகளில் HSBC-ன் முதல் பெண் தலைமை அதிகாரியான இந்திய பெண்… யார் இந்த பாம் கவுர்?
ஹேர் ஆயில், டூத்பேஸ்ட், சோப்பு, டிடர்ஜெண்ட் மற்றும் வாஷிங் பவுடர், கோதுமை, அரிசி, தயிர், லஸ்ஸி, மோர், வாட்ச், டிவி 32 இன்ச் வரை, பிரிட்ஜ், வாஷிங் மெஷின்கள், மொபைல் போன்கள் போன்ற ஜிஎஸ்டி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்ட முக்கியப் பொருட்கள் ஆகும். மத்திய நிதியமைச்சரை தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட கூட்டாட்சி அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி வரி விகிதங்களை முடிவு செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
