இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்னா் மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சியாக இருந்த பாஜக, நீா்ப்பாசனம் மற்றும் நீா் வளத் துறை அமைச்சராக இருந்த அஜீத் பவாா் மீது ரூ.70,000 கோடி ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது. அதன்பிறகு நடைபெற்ற தோ்தலில் பாஜக வெற்றிபெற்றதும் தேவேந்திர ஃபட்னவீஸ் முதலமைச்சரானாா். அப்போது அஜீத் பவாா் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை காண்பித்து அவா் மீது விசாரணையை தொடங்க உத்தரவிடப் போவதாக தேவேந்திர ஃபடனவீஸ் மிரட்டியுள்ளாா்.

&w=1200&resize=1200,675&ssl=1)