• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள்

GenevaTimes by GenevaTimes
November 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக கருதப்படும் ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா (North Korea)  நேற்று (31) சோதனை செய்துள்ளது.


இதன் மூலம், மொத்த உலக நாடுகளும் உறைந்துபோய் உள்ளன.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் (North Korea) இடையே கடும் மோதல் போக்கு உள்ள நிலையில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா உதவி செய்து வருகிறது.


இதனால் அமெரிக்காவுக்கும் (USA), வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் தொடர்ந்து நிலவி வருகிறது.

பொருளாதார தடை


மேலும்,
வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்கா உள்பட அதன் ஆதரவு நாடுகள் வடகொரியாவுடன் எந்த தொடர்பையும் தற்போது வரை வைத்திருக்கவில்லை.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile



இதனால் வடகொரியா அளவில் சிறிய நாடாக இருந்தாலும் கூட வல்லரசு நாடான அமெரிக்காவை தனது பரம எதிரியாக எதிர்த்து வருவதோடு அமெரிக்காவுக்கு தொடர்ந்து நேரடியாக வடகொரியா மிரட்டல் விடுத்து வருகிறது.



அமெரிக்காவை மிரட்டி பார்க்கும் வகையில் ஏவுகணை சோதனைகளையும் அவ்வப்போது வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) நிகழ்த்தி வருகிறார்.



இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு வடகொரியா எல்லையில் தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் தொடர்பான கூட்டு பயிற்சியை மேற்கொண்டது.

 ஏவுகணை சோதனை



இதற்கிடையே தான் நேற்று வடகொரியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஹ்வாசாங் – 19 என்று பெயரிட்டுள்ள ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile



இந்த ஏவுகணை சோதனை தான் தற்போது அமெரிக்கா உள்பட மொத்த உலக நாடுகளையும் உறைய வைத்துள்ளது.

ஏனென்றால் இந்த ஹ்வாசாங் – 19 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அளவில் மிகப்பெரியதாக உள்ளது.



வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளன.


இந்த ஏவுகணைகள் 20 மீட்டர் நீளம் அதாவது 66 அடி நீளம் கொண்டதாகும்.

ஆனால் தற்போது வடகொரியாக சோதித்து பார்த்துள்ள ஹ்வாசாங் – 19 ஏவுகணை என்பது 28 மீட்டர் நீளம் கொண்டதாகும். அதாவது 92 அடி நீளம்.


மேலும் பொதுவாக ஏவுகணைகளில் திரவ வடிவில் தான் வெடிப்பொருட்கள் நிரப்பப்படும்.



ஆனால் தற்போதைய ஹ்வாசாங் 19 ஏவுகணையில் திட நிலையில் வெடிப்பொருட்களை நிரப்ப முடியும் என்பதோடு அதிக உயரத்தில், அதிக தூரம் சென்று தாக்கும் தன்மை கொண்டது.

ஜனாதிபதி கிம் ஜாங் உன்


அதோடு ரேடார் கண்காணிப்பில் இந்த ஏவுகணை சிக்காமல் நேரடியாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறனுடையதாக உள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட ஹ்வாசாங் – 19 ஏவுகணையில் எந்த வெடிப்பொருட்களும் நிரப்பப்படவில்லை.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile



இந்த ஏவுகணை கடலில் விழும்படியாக ஏவி சோதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சோதனையை ஜப்பான் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென் நகாடனி கூறுகையில், ‛‛வடகொரியா ஏவி சோதனை செய்துள்ள ஏவுகணை என்பது முற்றிலும் புதிதானது.

இந்த ஏவுகணை சோதனை 86 நிமிடங்கள் நடந்துள்ளது.

வானில் 7 ஆயிரம் கிலோமீட்டர் (4,350 மீட்டர்) தொலைவில் பறந்துள்ளது.

இது வடகொரியாவின் முந்தைய ஏவுகணைகளை விட அதிக உயரத்தில் பறந்து சோதிக்கப்பட்டுள்ளது.




இந்த ஏவுகணையால் வடகொரியாவில் இருந்து அமெரிக்காவின் மையப்பகுதியை கூட தாக்க முடியும்” என கூறியுள்ளார்.


அதோடு வடகொரியாவின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளார்.



மேலும் இந்த ஏவுகணை சோதனை பற்றி வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபற்றி அவர், ‛‛இந்த ஏவுகணை பரிசோதனை என்பது எதிரிகளுக்கான எச்சரிக்கை தான்.

அமெரிக்காவில்  ஜனாதிபதி தேர்தல்

சமீபத்தில் எங்களின் பிராந்தியத்தில் வடகொரியாவுக்கு எதிராக செயல்கள் நடக்கின்றன.

இதனால் எங்கள் நாட்டை அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் இந்த இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள் | North Korea Unveils World S Strongest Missile


இதன்மூலம் அமெரிக்கா, தென்கொரியாவுக்கு ஜனாதிபதி கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.


அதோடு அமெரிக்காவில் நவம்பர் 5ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வேளையில் வடகொரியா இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.


இதனால் ஒருவேளை அமெரிக்கா – வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

Timbunan sampah, sisa pepejal cemari Sungai Buloh, Ijok | Makkal Osai

Next Post

“மலிவான ஸ்டன்ட்” – தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கார்கே பதிலடி! | Mallikarjun Kharge hits back at PM Modi over poll promises jibe

Next Post
“மலிவான ஸ்டன்ட்” – தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கார்கே பதிலடி! | Mallikarjun Kharge hits back at PM Modi over poll promises jibe

“மலிவான ஸ்டன்ட்” - தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கார்கே பதிலடி! | Mallikarjun Kharge hits back at PM Modi over poll promises jibe

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin