கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற 34-வது சீனியர் நேஷனல் டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டி, 32 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றதில் தமிழ்நாடு ஆண்கள் அணியானது இரண்டாவது பரிசினை வென்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 34-வது தேசிய அளவிலான டென்னிஸ்பால் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியானது ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
ஜந்து நாட்கள் நடைபெற்ற இந்த டென்னிஸ்பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி, ஆகிய 32 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.
ஆண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியினை வீழ்த்தி உத்திரபிரதேசம் அணியானது முதல் இடத்தினை பெற்று கோப்பையை தட்டிச் சென்றனர். தமிழ்நாடு அணி இரண்டாவது பரிசினை பெற்றனர். பெண்கள் பிரிவில் கோவா அணியும் முதல் பரிசினை வென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…