பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், மாலத்தீவு, மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அடிப்படையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 201 மில்லியன் டாலா் மதிப்பிலான அரிசி (ரூ.1,690 கோடி) ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டில் இந்த அரிசியின் ஏற்றுமதி மதிப்பு 852 மில்லியன் டாலராக (ரூ.7,164 கோடி) இருந்தது.

