இன்று அல்லது நாளை இந்திய – சீனா எல்லையில் கட்டுபாட்டு கோட்டிலிருந்து, இரு நாட்டு ராணுவ வீரர்களையும் திரும்ப பெற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்திய – சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதிலிருந்து அந்த எல்லையில் இரு நாடுகளும் ராணுவ வீரர்களை குவித்து வந்தனர்.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், ஒருவழியாக கடந்த வாரம் இரு நாடுகளுக்கு இடையே இந்தப் பிரச்னை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜிங் பிங் சந்தித்து பேசிக்கொண்டனர்.

