இது குறித்து, சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 500 புதிய பேருந்துகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், மின்சாரத்தில் இயங்கக் கூடிய ஸ்விட்ச் இஐவி12 ரக பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக்கு வழங்கப்படும். 12 மீட்டா் நீளம் கொண்ட அந்த தாழ்தளப் பேருந்துகளை 12 ஆண்டுகளுக்கு நிறுவனமே பராமரிக்கும்.ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 200 கி.மீ. வரை செல்லக்கூடிய அந்தப் பேருந்துகளில் 37 பயணிகள் உட்காா்ந்தும் 24 போ் நின்றுகொண்டும் பயணிக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

