“நாம் நம் கடமையை தள்ளிப்போடவோ, அவசரப்படவோ இல்லை. அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் முடிவெடுப்பவர்கள் சரியானதாகவும் நியாயமானதாகவும் கருதப்படும் செயல்கள் குறித்த நேரத்தில் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மீண்டும் செய்யப்படும்” என இஸ்ரேலை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார் காமேனி.
“இஸ்லாமிய நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே குரானின் கொள்கை. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், இறைவனின் மதிப்பைப் பெறுவீர்கள், உங்கள் எதிரியை வெல்வீர்கள்… உங்களைப் பிரித்து ஆள்வதே எதிரியின் கொள்கை. அவர்கள் இந்த கொள்கையை இஸ்லாமிய நாடுகளில் பலவகைகளில் நடைமுறைப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இன்று, இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும். உங்கள் எதிரியின் தந்திரத்தில் இருந்து மீண்டு வருவதற்கான நாள் இன்று” என இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசினார்.

“இஸ்லாமியர்கள் இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது. நம் பாதுகாப்புக் கச்சையை இறுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை அனைத்து நாடுகளும் விடுதலை பெற வேண்டும்” என்றார் ஈரானி காமேனி.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் செய்யது ஹசன் நஸ்ரல்லா, ஈரானிய ஜெனரல் அப்பாஸ் நில்ஃபோருஷன் மற்றும் பிற வீரர்களுக்காக பிரார்த்தனை நடைபெற்றதாக ஈரான் அரசு ஊடகம் IRNA தெரிவிக்கிறது.
இஸ்ரேலுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக, “தேவைப்பாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தும்” என்றும் பேசினார் சுப்ரீம் லீடர்!

