1938-ம் ஆண்டு பிறந்தார் ஆலிஸ் ஜி பிராயர். தந்தை ரிச்சர்ட் ஹென்றி பிராயர், தாய் ஏர்னா மிடில்டா ஆகிய இருவருமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இருவரும் நாகர்கோவில் வந்து தங்கியிருந்தபோது, 1938-ம் ஆண்டு பிறந்தார் ஆலிஸ். தனது 6 வயது வரை நாகர்கோவிலில்தான் வளர்கிறார். பிறகு கொடைக்கானல் பள்ளியில் நான்காம் வகுப்பு வரைப் பயில்கிறார்.

1948-ம் ஆண்டு, அதாவது தனது 10 வயதில் குடும்பத்தோடு தாய் நாட்டுக்குச் செல்கிறார் ஆலிஸ். அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்று, மருத்துவ உயர் கல்வியையும் முடித்தார். 1968-ம் ஆண்டு மருத்துவராகி, இந்தியாவுக்கே திரும்புகிறார் ஆலிஸ். குறிப்பாக, தான் பிறந்த தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் இருந்த அலாதிப் பிரியம்தான் மீண்டும் அவர் இங்கு வருவதற்கான காரணம். `வாழ்நாள் வரை தமிழ்நாடுதான் தனது வீடு’ என உணர்வால் உறுதி எடுத்துக்கொண்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்தார்.

