இந்த நிலையில், காணாமல் போன அர்மாண்டோ அல்பினோவின் சகோதரி மகன் அலிடா அலெக். இவர் தீயணைப்பு வீரராகவும், கப்பற்படையிலும் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கிறார். இவர் காணாமல் போன மாமாவை தேடுவதாக முடிவு செய்திருக்கிறார். அதற்காக காவல்துறை, நீதித்துறை, பழைய நூலகங்கள் எனப் பல்வேறு பகுதிகளில் அலைந்து திரிந்து, தன் மாமாவின் சிறுவயதுப் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சேகரித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் 2020-ம் ஆண்டு ஆன்லைன் டி.என்.ஏ தகவல்கள் மூலம் காணாமல் போன மாமாவான அர்மாண்டோ அல்பினோவை அடையாளம் கண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பல்வேறு ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பித்து போராடியிருக்கிறார். தற்போது 76 வயதான அர்மாண்டோ அல்பினோ மீண்டும் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அலிடா அலெக், “மாமா, மூத்த மாமா ரோஜரை முதன்முதலாக சந்தித்தபோது இருவரும் இருக்கமாக நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு நெகிழ்வாக இருந்தது
மாமாவின் சிறுவயதுப் புகைப்படம், டி.என்.ஏ சோதனை மூலம்தான் மீண்டும் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. சமீபத்தில்தான் புற்றுநோயால் மூத்த மாமா இறந்தார். தற்போது அர்மாண்டோ அல்பினோ எங்களுடன்தான் தங்கியிருக்கிறார். மாமா காணாமல் போனதற்குப் பிறகு என்னாவானார் என்பது குறித்து எங்களிடம் பேசவில்லை. அதை வெளியே கூறுவதை அவர் விரும்பவில்லை என நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

