இலங்கையில் வரும் சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தீவிர பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த அனுரகுமார திசநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உட்பட 38 பேர் தேர்தலில் களம் காண்கின்றனர்.
இதையும் படிக்க:
ரேஷன் கார்டுதாரர்களே… பயன்தரும் இந்த 5 திட்டங்கள் பற்றி தெரியுமா?
இந்நிலையில், தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு, அதாவது நேற்றுடன் அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை நிறைவு செய்த நிலையில், வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மாபெரும் கிளர்ச்சிக்கு பிறகு, இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலில், ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
