அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அந்த விவாதத்தில் ட்ரம்பின் கேள்விகளுக்கு, ஜோ பைடன் பதிலளிக்க முடியாமல் திணறினார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.

இந்நிலையில், கமலா ஹாரிஸுக்கும் – ட்ரம்புக்கும் இடையேயான விவாத நிகழ்ச்சி கடந்த புதன் கிழமை நடைபெற்றது. கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையே நடந்த அந்த விவாதத்தில், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருந்தனர். அமெரிக்கப் பொருளாதாரம், புலம்பெயர்ந்தோர் சட்டங்கள், கருக்கலைப்புச் சட்டங்கள், இனப் பாகுபாடு, உக்ரைன் – ரஷ்யா போர் எனப் பல்வேறு தலைப்புகளில் சூடான விவாதம் நடைபெற்றது. வெறுப்பு மற்றும் இனப் பாகுபாடுகளை ட்ரம்ப் பரப்புவதாகக் கமல் ஹாரிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

