இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு என்பதால் தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகின்றது.
கடந்த சில வாரங்களாக மழை பொழிந்ததால் பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டன. இந்நிலையில் இன்று விசேஷ நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாகக் காணப்பட்டதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பூக்களானது செட்டிலம்பட்டி, ஓட்டப்பிடாரம், பேரூரணி, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், புதியம்புத்தூர், ஓசனூத்து, செவல்குளம், மணியாச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. மேலும் பிச்சிப்பூ ஆனது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி மார்க்கெடிருக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
இதையும் படிங்க: தரணியெங்கும் மணக்கும் சாம்பிராணி… தாமிரபரணி மகளிர் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்பு…
இது குறித்து பூ வியாபாரி செல்லப்பா கூறுகையில், “பொதுவாக விசேஷ நாட்களில் பூக்களின் விலை சற்று உயர்ந்த காணப்படும். அதேபோல் இன்று ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பு என்பதால் பூக்களின் விலை சற்று உயர்ந்த காணப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்கள் மழை இருந்ததால் பூக்களின் வரத்தும் குறைந்த காணப்பட்டன, அதனால் பூக்களின் விலை இன்று சற்று உயர்ந்து காணப்படுகிறது.
மல்லிப்பூ கிலோ ரூ.1200 வரை விற்பனை ஆகின்றது. மேலும், மல்லிகைப்பூ வரத்துக் குறைவால் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். பிச்சிப்பூ கிலோ ரூ.1300, சம்பங்கி பூ கிலோ ரூ.350, முல்லைப்பூ கிலோ ரூ.800, கனகாம்பரம் கிலோ ரூ.1000 வரை விற்பனையாகின்றது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
