நாடு முழுவதும் நில உரிமையாளர்களுக்க்கும், குத்தகைதாரர் அல்லது வாடகைதாரர்களுக்கு இடையிலான தகராறுகள் அடிக்கடி நடக்கின்றன. பலர் சொத்துகளை வாடகைக்கு விட்டு, அதன்மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். வீடு அல்லது பிற சொத்துகளை வாடகைக்கு விடும் பலர், வேறொரு நகரத்தில் வசிக்கும்போது, சொத்து தொடர்பான தகராறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
இந்த சொத்தின் மீதான தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக, வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இதன்மூலம் குத்தகைதாரர் எந்த சர்ச்சையையும் எழுப்ப முடியாது என்றும் நில உரிமையாளர்கள் கருதுகின்றனர். ஆனால், சர்ச்சையைத் தவிர்க்க வாடகை ஒப்பந்தத்திற்குப் பதிலாக வேறொரு ஆவணத்தை நீங்கள் பெற வேண்டும். இது உங்கள் நிலத்தின் உரிமையை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும்.
அதாவது, ‘லீஸ் மற்றும் லைசென்ஸ்’ ஆவணம் ஒரு நில உரிமையாளரின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் திறன் கொண்டது. நகரங்களில் பலர் இதுபோன்ற ஆவணங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த ஆவணத்தில் குத்தகைதாரருக்கு சொத்தின் மீது எந்த விதமான உரிமையையும் நிறுவ வாய்ப்பு கிடைக்காத விதிகள் உள்ளன. அதை உருவாக்குவது கடினமான காரியம் அல்ல. வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகைப் பத்திரம் போன்று இந்த ஆவணமும் எளிதாகத் தயாரிக்கப்படுகிறது. சொத்து விவகாரங்களில் நிபுணரான பிரதீப் மிஸ்ரா, அதை தயாரிப்பதற்கான முழுமையான முறையை விளக்கியுள்ளார்.
இந்த ஆவணம் வாடகை ஒப்பந்தம்
போல இருந்தாலும், அதில் சில ஷரத்துகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன என்கிறார் பிரதீப் மிஸ்ரா. வாடகை ஒப்பந்தம் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் அல்லது சொத்துக்களுக்கு செய்யப்படுகிறது. இதன் காலம் 11 மாதங்கள் மட்டுமே. குத்தகை ஒப்பந்தத்தைப் பற்றி பேசினால், அது 12 மாதங்களுக்கும் மேலாக செய்யப்படலாம். இந்த ஆவணம் குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அதன் ஆயுட்காலம் 10 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம். இந்த ஆவணத்தை நோட்டரி மூலம் முத்திரைத் தாளில் மட்டுமே நீங்கள் பெற முடியும். இருப்பினும், நீங்கள் 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு மேல் குத்தகை ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அது நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன? – 9 August
நீங்கல் குத்தகை ஒப்பந்தம் செய்தாலும் அல்லது லைசென்ஸ் ஆவணம் தயாரித்தாலும், இந்த இரண்டு ஆவணங்களும் நில உரிமையாளரின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே. இந்த சொத்து ஒரு குறிப்பிட்ட குத்தகைதாரருக்கு குடியிருப்பு அல்லது வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறது என்று அதில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் 10 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கலாம். குத்தகை மற்றும் உரிமத்தில், நில உரிமையாளர் ‘உரிமைதாரர்’ என்றும், குத்தகைதாரர் ‘குத்தகையாளர்’ என்றும் தெளிவாகப் பதிவு செய்யப்படுகிறது.
இந்த ஆவணத்தின் மூலம் 10 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை குத்தகை மற்றும் உரிமம் பெறலாம். குத்தகைதாரர் எந்த வகையிலும் சொத்தின் மீது எந்த உரிமையையும் கோர மாட்டார் என்று இதில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. குத்தகைக்கு எந்த தரப்பினரும் இறந்தால், அவரது வாரிசுகள் அதைத் தொடரலாம். வாடகை ஒப்பந்தத்தில் இது நடக்காது. குத்தகைதாரர் சொத்தை கையகப்படுத்தினாலும், அவருக்கு எந்த சட்ட உரிமையும் இருக்காது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)