உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த ஒரு பெண், ஐஐஎம்-ல் படிப்பை முடித்து, நல்ல இடத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தான் பணிபுரியும் இடத்தில், வாடிக்கையாளர்களால் திருப்பி அனுப்பப்படும் பொருட்களை அந்நிறுவனம் குப்பையில் வீசுவதை அவர் கவனித்து வந்த நிலையில் அதுவே அவரது தொழிலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்த அவர், யாரும் ஆர்வம் காட்டாத வித்தியாசமான, அதே சமயத்தில் ஒரு அசாதாரணமான வியாபாரத்தைத் தொடங்கப் போகிறோம் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆமாம், குப்பையிலிருந்து மறுசுழற்சி அல்லது மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினார். பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறிய நகரங்களில் அவரது நிறுவனத்தை தொடங்கினார். இவ்வளவு நேரம் நாம் பேசிய பெண்மணியின் பெயர் ஹர்ஷிதா சந்திரா. இவருடைய நிறுவனத்தின் பெயர் Upcycle Lux. கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வரும் இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது.
இதையும் படிக்க:
பல தடைகளை உடைத்து ஒலிம்பிக்கில் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த வினேஷ் போகத்.. யார் இந்த சிங்கப்பெண்?
ஹர்ஷிதா சந்திரா பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்தவும், மறுசுழற்சி செய்யும் தொழிலை 2020-ம் ஆண்டு Upcycleluxe என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மூலம் தொடங்கினார். இந்நிறுவனம் மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது மீள்சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. பழைய பிளாஸ்டிக் பாட்டில், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மரப்பட்டைகள், மிஞ்சிய தோல்கள் மற்றும் டி-ஷர்ட் ஆகிய பொருட்களை மீண்டும் பயன்படுத்தி பேனா ஸ்டாண்டுகள், லேப்டாப் ஸ்டாண்டுகள், மொபைல் ஸ்டாண்டுகள் மற்றும் சட்டைகள் போன்ற பொருட்களை உருவாக்குவதே மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து உருவாக்கி வருகின்றனர்.
இந்த பொருட்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்ட பிறகு ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பும் உருவாகியுள்ளது. இந்த தொழிலுடன் சேர்த்து, ஹர்ஷிதா சந்திராவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஆதரித்து வருகிறது.
2020-ம் ஆண்டு தனிநபராக இந்த நிறுவனத்தை தொடங்கிய ஹர்ஷிதா சந்திராவின் தொழில் பயணத்தில் பலரும் இணைய ஆரம்பித்தனர். கார்த்திகேய சந்திரா மற்றும் சுபம் ஜெயின் ஆகியோரும் ஹர்ஷிதா சந்திராவுடன் இணை நிறுவனர்களாக இருக்கின்றனர்.
இந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கார்பன் நியூட்ரல் மற்றும் கழிவுகள் இல்லாத தேசத்தின் முதல் நிலையான ஃபேஷன் சந்தையாக இது திகழ்கிறது. இவர்களது ஒவ்வொரு தயாரிப்பும் பிளாஸ்டிக் இன்றி பேக்கேஜ் செய்யப்படுகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
