சிங்கப்பூர்: துவாஸ் வட்டாரத்தின் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.
அங்குள்ள சாலை கட்டமைப்புகள் அடுத்த பத்தாண்டுகளில் மேம்படுத்தப்படும்.
அடுத்த ஆண்டு சீரமைப்பு பணிகளை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது 2030 க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதுள்ள துவாஸ் மேம்பாலம் விரிவுப்படுத்தப்படும். சாலை பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததும், துவாஸ் துறைமுகத்திலிருந்து அயர் ராஜா எக்ஸ்பிரஸ்வே மற்றும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்வே போன்ற முக்கிய விரைவுச் சாலைகளுக்கு செல்வது இனி எளிதாகிவிடும்.
பயனியர் ரோட்டிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் சிங்கப்பூர் நில ஆணையம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிலத்தின் சில பகுதிகளை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here
The post துவாஸ் மேம்பாலம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது…!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin