ஸ்வீடனில் உள்ள ரயிலில் ஏசி வேலை செய்யாததால் டிக்கெட் விலையில் 50 சதவீதத்தை திரும்பப் பெற்றதாக இந்தியப் பெண் ஒருவர் தனது X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ஸ்வீடன் ரயில்வே நிர்வாகம் அவருக்கு குறுஞ்செய்தியை ஒன்றை அனுப்பியது. அதில், உங்கள் டிக்கெட் விலையில் 50% உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதே நேரத்தில், அந்தச் செய்தியில், அந்த இளம்பெண் டிக்கெட்டை இலவசமாக மீண்டும் பதிவு செய்ய கிளிக் செய்யவும் அல்லது டிக்கெட்டை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறவும் ஒரு இணைப்பு இருந்தது.
Girl from Malmö என்ற கணக்கில் இருந்து, ஸ்வீடனில் அதிக வரி செலுத்துவது பரவாயில்லை என்றும், இதுபோன்ற விஷயங்களுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த பெண், X வலைதளத்தில் ஸ்வீடன் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட குறுஞ்செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டிருந்தார். அதில், உங்கள் ரயிலில் உள்ள ஏசி பழுதடைந்துள்ளது, டிக்கெட் விலையில் 50 சதவீதம் உங்களுக்கு திருப்பி அளிக்கப்படும். அதற்கான வவுச்சரை மின்னஞ்சல் மூலம் நீங்கள் பெறுவீர்கள், அதை புதிய எஸ்ஜே டிக்கெட்டுகளை வாங்குவதற்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவும். சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று அதில் தெரிவித்திருந்தது. மேலும், உங்கள் பயணத்தை இலவசமாக மறுபதிவு செய்ய அல்லது ரத்துசெய்து பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால் இணையதளத்தைப் பார்வையிடவும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.
சமீபத்தில் பகிரப்பட்ட இந்த பதிவானது, வைரலாகி 3,30,000 பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பலர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள கமெண்ட்ஸ் பகுதிக்குச் சென்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஸ்வீடன் அரசின் இந்த செயலை பலர் பாராட்டி வந்தாலும், இந்திய ரயில்வேவை குறித்து சிலர் விமர்சித்து வருகின்றனர்.
Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?
அதில் ஒரு யூசர் கூறியதாவது, இது நீங்கள் செலுத்தும் வரியைப் பற்றியது அல்ல, அதற்கேற்ப நீங்கள் பெறும் வாழ்க்கைத் தரம் பற்றியது என்று குறிப்பிட்டார். மற்றொரு யூசர் கூறியதாவது, எனது ரயில் லண்டனில் 20 நிமிடங்கள் தாமதமானது, அதற்காக ஆஸ்திரேலியாவில் எனக்கு இழப்பீடு வழங்கப்பட்டது என்று தனது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். இன்னொரு யூசர் கூறியதாவது, பொதுப் போக்குவரத்து அமைப்பு உயர்நிலையில் உள்ளது. ஜெர்மனியைப் போல ரயில்கள் தாமதமாக வரவில்லை என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புகூட 20 வினாடிகள் முன்பு சென்றதற்காக பயணிகளிடம் ஜப்பான் ரயில்வே மன்னிப்புக் கோரியது குறிப்பிடதக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
