அந்த 30 மாணவர்களில் 10-ம் வகுப்பு படிக்கும் தீபாளியும் ஒருவர். இது குறித்துப் பேசியிருக்கும் தீபாளி, “இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மாணவர்களில் நானும் ஒருவர் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பல்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்வேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

“முதல் முறை அவளைத் தனியாக அனுப்புவதற்குச் சற்று பதற்றமாக இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்” என்று தீபாளியின் அம்மா கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 19-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் தீபாளி கனோஜ்யாவிற்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

