கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாதிரி திறன் கடன் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக ரூ.7.5 லட்சம் வரை எளிதாக கடன் பெறும் வகையில் திருத்தி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, வியாழக்கிழமையன்று திருத்தப்பட்ட திட்டம் தொடங்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31 வரை கடன் வாங்கியுள்ள 10,077 பேருக்கும், கடன் தொகையை நீட்டிப்பதற்காக ரூ.115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.1.5 லட்சம் மட்டுமே கடன் வழங்கப்பட்டதால், அதற்கும் குறைவான திறன் படிப்புகளையே மாணவர்கள் எடுத்து படிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அதைவிட அதிக கட்டணம் செலுத்துவோர் இந்த கடனை வாங்க முடியவில்லை. எனவே திருத்தப்பட்ட புதிய திட்டத்தில் ரூ.7.5 வரை கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:
டி20 கேப்டனாக சூர்யகுமாரை கவுதம் கம்பீர் தேர்வு செய்தது ஏன்? – சீக்ரெட்டை உடைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!
முன்பு பொதுத்துறை வங்கிகள், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் மட்டுமே இந்த கடனுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெற முடியும் என்ற சூழல் இருந்தது. தற்போது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் இந்த கடன்களை வழங்கலாம் என்று புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால், தேசிய திறன் தகுதி கட்டமைப்புக்கு கீழ் உள்ள படிப்புகளைத் தவிர, அதிக திறன் படிப்புகளிலும் மாணவர்கள் சேர முடியும். மேலும், ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் பிளாட்ஃபார்மில் உள்ள படிப்புகளிலும் சேர வாய்ப்புள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
