நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் புதிய வருமான வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தணிக்கையாளர் நாகராஜன் கூறுகையில், “2024- 2025க்கான புதிய வருமான வரி திட்டத்தில் நடுத்தர மக்களைக் கருத்தில் வைத்து இந்த மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
வருமான வரி இரண்டு வகைகள் உள்ளன, அதாவது பழைய வருமான வரி விதிப்பு மற்றும் புதிய வருமான வரி விதிப்பு இருக்கின்றன. பழைய வருமான வரி விதிப்பு என்றால் சேமிப்பிற்கு முதன் உரிமை கொடுக்கப்படுகிறது. புதிய வருமான வரி விதிப்பின்படி செலவு செய்ய வேண்டும் என்பதன் நோக்கமாகக் கொண்டுவரப்பட்டது.
இதையும் படிங்க: அம்மன் கோவில்களில் குடி கொண்டிருக்கும் கும்மி… மொழிக்கு முந்தைய பாரம்பரியக் கலையின் கதை…
இந்த 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் பழைய வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வரி விதிப்பில் நடுத்தர மக்களுக்காகச் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, போன வருடம் போல் வருடத்திற்கு மூன்று லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி 0% ஆகும், 3-7 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி ஐந்து சதவீதமாகும் ,7-10 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 10% ஆகும், 10-12 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 15% ஆகும்,12-15 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு வரி 20% ஆகும்.
15 லட்சம் வருமானம் வருபவர்களுக்கு 30% வரியாகும். இதனால் நடுத்தர தனி நபருக்கு 17,500 சேமிப்பாகிறது. அதாவது போன வருடம் கட்டப்பட்ட வரியிலிருந்து 17,500 குறைந்து காணப்படுகிறது. மேலும் சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஸ்டாண்டர்ட் டீவியேசன் 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சம்பளம் வாங்குபவர்களுக்கு மிகப் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது, நடுத்தர மக்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளதால் இந்த புதிய வரி மாற்றம் வரவேற்புடையதாகிறது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
